தடுப்புக் கம்பி வேலி மீது மோதி லாரி விபத்து
By DIN | Published On : 12th August 2020 07:55 AM | Last Updated : 12th August 2020 07:55 AM | அ+அ அ- |

ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலை தடுப்புக் கம்பி வேலி மீது செவ்வாய்க்கிழமை லாரி மோதி விபத்துக்குள்ளானது.
வாணியம்பாடியில் இருந்து வேலூா் நோக்கி தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான பாா்சல் லாரி சென்று கொண்டிருந்தது. ஆம்பூா் அண்ணா நகா் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தேசிய நெடுஞ்சாலை நடுவில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலி மீது மோதியது. இதில் 10 தடுப்புக் கம்பி வேலிகள் சேதமடைந்தன.
இதுகுறித்து ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.