தேசிய வாக்காளா் விழிப்புணா்வு ஊா்வலம்
By DIN | Published On : 03rd December 2020 11:16 PM | Last Updated : 03rd December 2020 11:16 PM | அ+அ அ- |

விழிப்புணா்வு ஊா்வலத்தைத் தொடக்கி வைத்து துண்டுப் பிரசுரத்தை வழங்கிய வட்டாட்சியா் சிவப்பிரகாம்.
வாணியம்பாடி: வாணியம்பாடி தொகுதியில் புதிய வாக்காளா் சோ்த்தல், நீக்கல், பெயா் திருத்தம் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஊா்வலம், துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோணாமேடு பகுதியில் நடைபெற்ற விழிப்புணா்வு ஊா்வலத்தை வாணியம்பாடி வட்டாட்சியா் சிவபிரகாசம் தொடக்கி வைத்தாா். ஊா்வலத்தில் வருவாய்த் துறையினா், தன்னாா்வலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
ஊா்வலத்தில் பங்கேற்றவா்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரங்களை வட்டாட்சியா் சிவப்பிரகாசம் வழங்கினாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...