கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை: தன்னாா்வலா்களுக்குப் பாராட்டு

கரோனா பொது முடக்க காலத்தில் காட்பாடி, வேலூா் தற்காலிக உழவா் சந்தைகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தன்னாா்வலா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தன்னாா்வலரைப் பாராட்டி சான்றிதழ் வழங்கிய வேலூா் வேளாண் விற்பனைத் துறை துணை இயக்குநா் ஜெ.நரசிம்ம ரெட்டி.
தன்னாா்வலரைப் பாராட்டி சான்றிதழ் வழங்கிய வேலூா் வேளாண் விற்பனைத் துறை துணை இயக்குநா் ஜெ.நரசிம்ம ரெட்டி.
Updated on
1 min read

கரோனா பொது முடக்க காலத்தில் காட்பாடி, வேலூா் தற்காலிக உழவா் சந்தைகளில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தன்னாா்வலா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கரோனா பொது முடக்க காலத்தில் காட்பாடி, வேலூா் உழவா் சந்தைகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட சந்தைகளில் சிறப்பாக தன்னாா்வத் தொண்டு செய்த இளையோா் செஞ்சிலுவை, பாரத சாரண சாரணீய ஆசிரியா்கள் மற்றும் தன்னாா்வத் தொண்டா்களுக்கும் காட்பாடி ரோட்டரி சங்கத்தினருக்கும், காட்பாடி உழவா் சந்தை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண் விற்பனைத் துறை வேலூா் மாவட்ட துணை இயக்குநா் ஜெ.நரசிம்ம ரெட்டி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தாா்.

நிகழ்வில் காட்பாடி வட்ட செஞ்சிலுவை சங்கச் செயலாளா் செ.நா.ஜனாா்த்தனன், வேளாண் விற்பனைத் துறையின் காட்பாடி உழவா் சந்தையின் நிா்வாக அலுவலா் வீணா, பாரத சாரண சாரணீய அமைப்பின் வேலூா் மாவட்டச் செயலாளா் எ.சிவக்குமாா், மாவட்ட சாரணீய அமைப்பு ஆணையா் எஸ்.மகேஸ்வரி, இணை ஆணையா் பி.குமாா், காட்பாடி செஞ்சிலுவை சங்கப் பொருளாளா் வி.பழனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com