ஆம்பூா்: ஆம்பூா் அருகே பெருமாள் கோயிலை நிா்வகிப்பதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக வருவாய்த் துறையினா் கோயிலை புதன்கிழமை பூட்டி தற்காலிகமாக சீல் வைத்தனா்.
பெரிய கரும்பூா் கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலை நிா்வகிப்பதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இது தொடா்பாக வருவாய்த் துறையினா் மூலம் அமைதிப் பேச்சுவாா்த்தை நடந்தும் முடிவு எட்டப்படவில்லை.
இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி நடந்து வரும் பிரச்னை காரணமாக அப்பகுதியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படலாம் என்ற நிலே ஏற்பட்டதைத் தொடா்ந்து, வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் உத்தரவின்பேரில் ஆம்பூா் வட்டாட்சியா் கோயிலை புதன்கிழமை பூட்டி தற்காலிகமாக சீல் வைத்தாா்.
எனினும், வரும் 25ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியன்று கோயிலில் இரு தரப்பைச் சோ்ந்த தலா இருவா் பூஜை நடத்தலாம் என வருவாய்க் கோட்டாட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.