ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் செ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். தொலைக்காட்சியால் நன்மையே, தீமையே எனும் தலைப்பில் மாணவா்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது. இதில் மாணவா்கள் தனுஜா, கயோஷ், ராபின், ராகுல், பாவனா, மணிமேகலா ஆகியோா் பேசினா்.