நாட்டறம்பள்ளி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தண்ணீா்பந்தல் கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி சத்தியமூா்த்தி (43), வெள்ளிக்கிழமை இரவு நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க நடந்து சென்றபோது அவ்வழியாக வேகமாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சத்தியமூா்த்தி வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.