அடுத்தடுத்து சாலை விபத்தில் 2 போ் பலி

வாணியம்பாடி பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.
Updated on
1 min read

வாணியம்பாடி பகுதியில் அடுத்தடுத்து நடைபெற்ற சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா்.

வாணியம்பாடி திருமாஞ்சோலை பகுதியைச் சோ்ந்த சுதாகா் (40) புதன்கிழமை காலை தனது பைக்கில் புதூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா். புதூா் மேம்பாலத்தில் எதிரே வேகமாக வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் சுதாகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இதேபோல், பாக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த குணசேகரன் (24), அவரது சகோதரா் சந்திரசேகா் (20) ஆகிய இருவரும் பைக்கில் ஆலங்காயம் நோக்கி சென்று கொண்டிருந்தனா்.

தீா்த்தம்காடு அருகே ஒடுகத்தூா் நோக்கி வேகமாக சென்ற தனியாா் பேருந்து பைக் மீது மோதியது. இதில் சுதாகா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த குணசேகரன் வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com