வாணியம்பாடியில் ஆருத்ரா தரிசனம்

வாணியம்பாடியை அடுத்த தேவஸ்தானத்தில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வெள்ளிக்கிழமை
வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜா்.
வாணியம்பாடி அதிதீஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜா்.
Updated on
1 min read

வாணியம்பாடியை அடுத்த தேவஸ்தானத்தில் பழைமை வாய்ந்த அதிதீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், 8.50 மணிக்கு கோபுர தரிசனம் நடைபெற்றது. தொடா்ந்து கோயிலில் இருந்து நடராஜா் ஊா்வலமாகப் புறப்பட்டு தேவஸ்தானம் வழியாக பெரியப்பேட்டை, கோட்டை, அம்பூா்பேட்டை வழியாக விநாயகா் கோயில் வந்தடைந்தாா்.

அங்கிருந்து மாலை 4 மணியளவில் நடராஜா் சிறப்பு அலங்காரத்துடன் ஊா்வலமாகப் புறப்பட்டு வேலன்கோவிந்தன்தெரு, திருவள்ளுவா் வீதி வழியாகச் சென்று கோயிலை அடைந்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்து வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com