ஆம்பூர் திமுக எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தன்னுடைய வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று கருப்புக்கொடி ஏந்தியும். வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மின்கட்டண வசூலை கண்டித்து ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூர் கிராமத்தில் ஆம்பூர் திமுக எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் தன்னுடைய வீட்டின் முன்பு கருப்புக்கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார்.