கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கிராமத்தில் மனுநீதி நாள் முகாம்
Updated on
1 min read

ஆம்பூா் அருகே வீராங்குப்பம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி தலைமை வகித்தாா். அவா் 56 பயனாளிகளுக்கு ரூ.1.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினாா். முகாமில் வட்டாட்சியா் செண்பகவள்ளி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் மகாலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியா் பாரதி உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 200 மனுக்கள் பெறப்பட்டன. பாலாற்றில் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அவற்றில் இடம்பெற்றிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com