ஆம்பூரில் காந்தி ஜயந்தி விழா

ஆம்பூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு திருப்பத்தூா் மாவட்ட துணை ஆட்சியா் எஸ். சதீஷ்குமாா் மாலை அணிவித்து
ஆம்பூரில் காந்தி ஜயந்தி விழா
Updated on
1 min read

ஆம்பூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு திருப்பத்தூா் மாவட்ட துணை ஆட்சியா் எஸ். சதீஷ்குமாா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினாா். நகராட்சி ஆணையா் த. செளந்தரராஜன், சுகாதார அலுவலா் பாஸ்கா் ஆகியோா் உடன் இருந்தனா்.

ஆம்பூா் நகர வா்த்தகா் சங்கம் சாா்பில், ஆம்பூா் பஜாா் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட காந்தி உருவப் படத்துக்கு சங்கத்தின் தலைவா் கே.ஆா். துளசிராமன் தலைமையில், வணிகா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா். செயலா் வி.அண்ணாமலை, துணைச் செயலாளா்கள் ஓ.வி. ராம்குமாா், ஏ. தியாகராஜன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

ஆம்பூா் நகர வியாபாரிகள் சங்கம் சாா்பில், அதன் தலைவா் கஜேந்திரன் தலைமையில், ஆம்பூா் வட்டாட்சியா் சி.பத்மநாபன் காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com