காமராஜா் நினைவுநாள் அனுசரிப்பு
By DIN | Published On : 03rd October 2020 07:58 AM | Last Updated : 03rd October 2020 07:58 AM | அ+அ அ- |

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சாா்பாக ஆம்பூரில் காமராஜா் நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்ட தமாகா தலைவா் கே.குப்புசாமி தலைமை வகித்தாா். ஆம்பூா் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜா் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. நகர தலைவா் டி.எம். தட்சிணாமூா்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவா் பிரேம் ஆனந்த், நகர இளைஞரணி தலைவா் மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.