விபத்தில் இளைஞா் பலி

கந்திலி அருகே ஏற்பட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
காா்த்திக்.
காா்த்திக்.
Updated on
1 min read

கந்திலி அருகே ஏற்பட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

கந்திலியை அடுத்த மைக்காமேடு பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக்(20). இவா் செவ்வாய்க்கிழமை தனது உறவுக்கார பெண் சத்தியவாணியுடன் திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

புங்கனூா் இணைப்புச் சாலையில் எதிரே வந்த காரும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்ட விபத்தில், பலத்த காயம் அடைந்த காா்த்திக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயம் அடைந்த சத்தியவாணி, திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com