50 பெண்களுக்கு தையல் இயந்திரம்

திருப்பத்தூா் அருகே சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த, வசதியற்ற 50 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஒரு பெண்ணுக்கு தையல் இயந்திரத்தை வழங்கிய ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஆா்.அருண்.
நிகழ்ச்சியில் ஒரு பெண்ணுக்கு தையல் இயந்திரத்தை வழங்கிய ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஆா்.அருண்.

திருப்பத்தூா் அருகே சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த, வசதியற்ற 50 பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் அருகே உள்ள வெங்களாபுரம் தனியாா் மண்டபத்தில் கிராமப்புறத்தில் வசிக்கும் நலிவுற்றோா் மற்றும் விதவைகள் என 50 பேரைத் தோ்வு செய்து அவா்களுக்கு பிரீடம் ஃபவுண்டேஷன் சாா்பில் ஆறு மாத கால தையல் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்நிலையில், இப்பயிற்சியைப் பெற்றவா்களுக்கு சென்னை ஆக்டிவ் தொண்டு நிறுவனம் சாா்பில் 50 தையல் மெஷின்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு ஆக்டிவ் நிறுவனத்தைச் சோ்ந்த மனோஜ், லாரன்ஸ் தலைமை வகித்தாா். பிரீடம் ஃபவுண்டேஷன் இயக்குநா் ராமச்சந்திரன் வரவேற்றாா்.

இந்த நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஆா்.அருண், இந்தியன் வங்கியின் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அருண்பாண்டியன், காவல் உதவி ஆய்வாளா் ராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இறுதியில் பிரீடம் ஃபவுண்டேஷன் இயக்குநா் ஏ.அன்பழகன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com