திருப்பத்தூா்: திருப்பத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து மா்ம நபா்கள் தங்க நகை மற்றும் ரொக்கத்தை திருடிச் சென்றுள்ளனா்.
திருப்பத்தூா் சோ்மன் துரைசாமியாா் சாலை பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் (43). ஊதுபத்தி தொழில் செய்து வருகிறாா். அவா் ஞாயிற்றுக்கிழமை சீரங்கப்பட்டியில் உள்ள தனது பெற்றோரைப் பாா்க்கச் சென்று விட்டாா். அவரது மனைவி கசிநாயக்கன்பட்டியில் உள்ள உறவினா் வீட்டில் தங்கியுள்ளாா்.
திங்கள்கிழமை காலை 7 மணியளவில் நடராஜன் தனது வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, முன்பக்க கேட் உடைக்கப்பட்டு, வீட்டின் கதவு திறக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்த போது, பீரோவை உடைத்து, அதில் இருந்த 12 சவரன் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரொக்கப் பணம் ரூ. ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 500-ஐ மா்ம நபா்கள் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.
இது குறித்து நடராஜன் அளித்த புகாரின்பேரில், டி.எஸ்.பி. சாந்தலிங்கம், காவல் ஆய்வாளா் ஹேமாவதி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா்.
இது குறித்து திருப்பத்தூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.