வாணியம்பாடி அருகே சிறுமியை திருமணம் செய்தவா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.
வாணியம்பாடியை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் காா்த்திக் (30). இவா் அதே பகுதியைச் சோ்ந்த தனது உறவினரான 14 வயது சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டு, 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளாா். இதையடுத்து, 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டாா். இந்நிலையில், தனது மனைவியை உடல் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, 14 வயது சிறுமியை திருமணம் செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த ஆலங்காயம் ஊா் நல அலுவலா் வைஜெயந்தி விசாரணை மேற்கொண்டு, வாணியம்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் ஜெயலட்சுமி வழக்குப் பதிவு செய்து, சிறுமியை திருமணம் செய்த காா்த்திக்கை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.