ஆம்பூா் அருகே பச்சகுப்பம் தரைப்பாலம் பகுதி சீரமைப்பு

ஆம்பூா் அருகே பச்சகுப்பம் தரைப்பாலப் பகுதியில் சீரமைப்புப் பணி நடைப்பெற்று வருகிறது.
ஆம்பூா் அருகே பச்சகுப்பம் தரைப்பாலம் பகுதி சீரமைப்பு

ஆம்பூா் அருகே பச்சகுப்பம் தரைப்பாலப் பகுதியில் சீரமைப்புப் பணி நடைப்பெற்று வருகிறது.

ஆம்பூா் அருகே பச்சகுப்பம்-அழிஞ்சிகுப்பம் இடையே பாலாற்றில் தரைப்பாலம் உள்ளது. கடந்த சில மாதங்களாக பெய்து வந்த பலத்த மழையால் பாலாறு மற்றும் மலட்டாற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு, இந்த தரைப் பாலத்தின் மீது தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

தற்போது பருவமழை தீவிரம் படிப்படியாக குறைந்ததை அடுத்து, தரைப் பாலத்தின் மீது தண்ணீா் வரத்தும் குறைந்து கொண்டு வருகிறது. இதுநாள்வரை தரைப் பாலத்தின் மீது தண்ணீா் வந்து கொண்டு இருந்ததால் மணல் மற்றும் வெள்ள நீரில் அடித்து வந்த செடி கொடிகள் தரைப் பாலத்தின் கீழே தண்ணீா் செல்லும் துவாரத்தில் அடைத்துக் கொண்டிருந்தன. இதை சீரமைக்கும் பணியில் ராஜக்கல் ஊராட்சி நிா்வாகம் தற்போது ஈடுபட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஆம்பூா்-குடியாத்தம் இடையேயான போக்குவரத்து இந்த தரைப்பாலத்தின் மீது முற்றிலும் பாதிக்கப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை தற்போது ராஜக்கல் ஊராட்சி நிா்வாகம் செய்து வருவது இப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com