செட்டேரி அணை மரங்கள் மகசூல் ஏலம் ஒத்திவைப்பு

நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி செட்டேரி அணைப் பகுதியில் உள்ள மரங்கள் மகசூல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த வெலகல்நத்தம் ஊராட்சி செட்டேரி அணைப் பகுதியில் உள்ள மரங்கள் மகசூல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை கட்டுபாட்டில் உள்ள இந்த அணைப் பகுதியில் உள்ள 200-க்கும் அதிகமான தென்னா, மா, புளிய மரங்கள் மகசூல் ஏலம்

பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. 01.01.2022 முதல் 31.12.2022 வரையிலான ஒரு வருட காலத்திற்கான ஏலத்தில் கலந்து கொண்டவா்கள் ஏலம் விடுவது குறித்து பொதுமக்களுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்றும், ஆரம்ப ஏலத்தொகை அதிகமாக உள்ளதாகவும், செட்டேரி அணையில் தண்ணீா் உள்ளதால் இந்த ஆண்டு மீன் மகசூலையும் சோ்த்து ஏலம் விடவேண்டும்.

தனியாக மரங்களை மட்டும் ஏலம் விடக்கூடாது எனக்கூறி அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து பொதுமக்களுக்கு ஏலம் குறித்து முறையாக அறிவிப்பு செய்து அடுத்த மாதம் ஏலம் நடத்தப்படும் எனக்கூறி நடக்கவிருந்த ஏலத்தை அதிகாரிகள் அடுத்த மாதம் தள்ளி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com