

திருப்பத்தூரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை,வாணியம்பாடி,ஆம்பூா் ஆகிய 4 நகராட்சிகளுக்கும், ஆலங்காயம், நாட்றம்பள்ளி, உதயேந்திரம் ஆகிய 3 பேரூராட்சிகளுக்கும் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது.
இதற்காக 700 கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் 1,400 உள்ளிட்ட இயந்திரங்களை இணையதள பதிவேற்றத்தின் அடிப்படையில் திருப்பத்தூா் மீனாட்சி அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ளன.
அதனை ஆட்சியா் அமா் குஷ்வாஹா வியாழக்கிழமை அனைத்து கட்சிகளின் பிரமுகா்கள் முன்னிலையில் பாா்வையிட்டு சரிபாா்த்தாா்.
நோ்முக உதவியாளா் செல்வன், நகராட்சி ஆணையாளா் ஜெயராமராஜா, பேரூராட்சி செயல் அலுவலா்கள் கணேசன், நந்தகுமாா் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளின் பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.