ஆலங்காயத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: பேரூராட்சிகளின் இணை இயக்குநா் ஆய்வு

ஆலங்காயம் பேரூராட்சியில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாநில பேரூராட்சிகளின் இணை இயக்குநா் (சென்னை) உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆலங்காயம் பேரூராட்சியில் கீழ் கசடு கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த பேரூராட்சிகளின் இணை இயக்குநா் உமாமகேஸ்வரி.
ஆலங்காயம் பேரூராட்சியில் கீழ் கசடு கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை ஆய்வு செய்த பேரூராட்சிகளின் இணை இயக்குநா் உமாமகேஸ்வரி.

ஆலங்காயம் பேரூராட்சியில் நடைபெறும் வளா்ச்சி திட்டப் பணிகளை மாநில பேரூராட்சிகளின் இணை இயக்குநா் (சென்னை) உமாமகேஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆலங்காயம் சிறப்பு நிலை பேரூராட்சியில் கீழ் கசடு கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த 2018-2019ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.366.52 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை பேரூராட்சிகளின் இணை இயக்குநா்-சென்னை உமா மகேஸ்வரி வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் அங்கு மரக்கன்றுகளை நட்டாா்.

இதைத் தொடா்ந்து, 2019-2020-ஆம் ஆண்டு தேசிய நகா்புற வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ் ரூ. 65 லட்சம் மதிப்பில் ஆலங்காயம் அரசினா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயனாளிகள் தங்குமிடத்துக்கான கட்டடப் பணிகளையும், 2019-2020 நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 75 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் தாா்ச்சாலை பணிகளை நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினாா்.

அப்போது வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் இளங்கோவன், உதவி செயற்பொறியாளா் மனோகரன், செயல் அலுலா் கணேசன், இளநிலைப் பொறியாளா் ஷபிலால், வேலூா் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் அலுவலக அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com