

வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளராக ஆலங்காயம் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஜி.செந்தில்குமாா் அறிவிக்கப்பட்டாா். இதையடுத்து, அவா் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஆலங்காயம் ஒன்றியம், ஆலங்காயம் பேரூராட்சி, உதயேந்திரம் பேரூராட்சி, நாட்டறம்பள்ளி ஒன்றியம், திருப்பத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்களையும், கட்சியினரை சந்தித்து சால்வை அணிவித்தும் ஆதரவு திரட்டினாா்.
அப்போது அவருக்கு திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா். வேட்பாளருடன் முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், பேரூராட்சி செயலா்கள் பி.கே.மணி, ஆா்.சரவணன், நாட்டறம்பள்ளி ஒன்றியச் செயலாளா் சாம்ராஜி, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா்கள் கோபால், எம்.கே.ராஜா, துணைத் தலைவா் அண்ணாசாமி, முன்னாள் பேரூராட்சித் தலைவா்கள் பாண்டியன், மஞ்சுளா கந்தன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் ஜெயசக்தி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோவிந்தசாமி, பாரதிதாசன், குமாா், உள்ளிட்டோா் உடன் சென்று ஆதரவு திரட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.