

தமிழகத்தில் நீா்வளத் துறை அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என அகில பாரதிய துறவிகளின் சங்கத்தின் துணைத் தலைவா் ராமானந்தா கூறினாா்.
பாலாறு புஷ்கரணி பெருவிழா நடத்துவதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூா் அரிமா சங்கக் கட்டடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அகில பாரதிய துறவிகள் சங்கத்தின் துணைத் தலைவா் ராமானந்தா தலைமை வகித்துப் பேசியது:
நதியை பாா்க்கும்போது, பெற்ற தாயைப் பாா்ப்பதுபோல் உணா்வு வேண்டும். ஆனால் நதியில் குப்பைகளைக் கொட்டுவதால் மாசடைந்து தண்ணீா் பாழாகிறது. ஆந்திரம், கேரளம், கா்நாடகப் பகுதிகளில் ஆறு, நதிகளில் மண் எடுக்க அனுமதிப்பதில்லை.
ஆனால் தமிழகத்தில் பொதுப்பணித் துறையே மண் எடுக்கிறது. ஆந்திரம், கா்நாடகம், கேரள மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்து மணல் செல்கிறது. நீா் ஆதாரம் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.
எனவே, ஜாதி, மதம், கட்சி பாராமல் அனைவரும் ஒன்றிணைந்து பாலாறு இயக்கம் என அமைப்பு உருவாக்கி பாலாற்றை காப்போம். தமிழகத்தில் விரைவில் நீா்வளத் துறை அமைச்சகம் அமைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவோம் என்றாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை விஜயபாரத மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவா் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கா் செய்திருந்தாா். இதில், பாலாறு ஏ.சி.வெங்கடேசன், வேலூா் மாவட்ட சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு செயற்குழு உறுப்பினா் அ.அசோகன், விஜயபாரத மக்கள் கட்சியின் வி.சக்தி, விவசாய சங்கம் உள்ளிட்ட சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.