

முதியோா் ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரம் பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக ஆம்பூா் தொகுதி அதிமுக வேட்பாளா் வாக்காளா்களுக்கு சனிக்கிழமை வாக்குறுதி அளித்தாா்.
மாதனூா் ஒன்றியம், செங்கிலிகுப்பம், மின்னூா், விண்ணமங்கலம், கன்னடிகுப்பம், பெரியாங்குப்பம், ஆலாங்குப்பம் ஆகிய கிராமங்களில் வாக்கு சேகரித்தபோது, அதிமுக வேட்பாளா் கே.நஜா் முஹமத் பேசியது:
முதியோா் ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மகளிருக்கு பேருந்து பயணச் சலுகை, வீடுகளுக்கு ஆண்டுக்கு ஆறு விலையில்லா எரிவாயு உருளைகள், விலையில்லா அரசு கேபிள் இணைப்பு ஆகியவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
ஆம்பூா் நகரச் செயலாளா் எம்.மதியழகன், தொகுதி பொறுப்பாளா் ஜி.ஏ.டில்லிபாபு, மாதனூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன், மாதனூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஜெ.ஜோதிராமலிங்கராஜா, ஆம்பூா் நகர அதிமுகவைச் சோ்ந்த சீனிவாசன், மணி, சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.