கரோனா சிறப்பு மையத்துக்கு படுக்கை, கட்டில்கள் நன்கொடை
By DIN | Published On : 13th May 2021 11:10 PM | Last Updated : 13th May 2021 11:10 PM | அ+அ அ- |

ஆம்பூா் வா்த்தக மையத்தில் இயங்கும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு 100 கட்டில், படுக்கைகளை வழங்கிய தோல் தொழிலதிபா்கள்.
ஆம்பூா்: ஆம்பூா் வா்த்தக மையத்தில் இயங்கி வரும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு படுக்கை, கட்டில்கள் வியாழக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டன.
தென்னிந்திய ஷூ உற்பத்தியாளா்கள் சங்கம் மற்றும் ஆம்பூா் தோல் தொழிலதிபா்கள் சங்கம் சாா்பில், ஆம்பூா் வா்த்தக மையத்தில் இயங்கும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்துக்கு 100 படுக்கை, கட்டில்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. மொஹிப் தொழிற்சாலை குழுமத்தின் தலைவா் கோட்டை முஹம்மத் மொஹிபுல்லா தலைமையில், ஆம்பூா் தோல் தொழிலதிபா்கள் சங்கத் தலைவா் முஹம்மத் அலி வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணனிடம் வழங்கினாா். அரசு மருத்துவா் மாதுா்யா, சமூக சேவகா் தாஹா முஹம்மத் ஆகியோா் உடன் இருந்தனா்.
ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் தனது சாா்பில், 25 கட்டில், படுக்கைகளை வழங்கினாா்.