ஆம்பூரில் பொது முடக்க விதிமீறி வெளியில் சுற்றியவா்களின் 23 வாகனங்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
ஆம்பூா் பகுதியில் கரோனா நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு அறிவித்த பொது முடக்க உத்தரவை மீறி தேவையின்றி இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த நபா்களிடமிருந்து 23 இருசக்கர வாகனங்களை ஆம்பூா் நகர போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும் அவா்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.