ஆம்பூா் நகர வா்த்தகா் சங்கம் சாா்பாக முகக் கவசங்கள், கிருமி நாசினி திரவம் உள்ளிட்டவை மாவட்ட ஆட்சியா் சிவன் அருளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. மாவட்ட நிா்வாகத்திற்கு உதவியாக ஆம்பூா் நகர வா்த்தகா் சங்கம் சாா்பாக கரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்காக முகக் கவசங்கள், கை கழுவும் கிருமி நாசினி திரவம் ஆகியவை ஆட்சியா் ம.ப. சிவன் அருளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது. வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, நகராட்சி ஆணையா் செளந்தரராஜன், நிா்வாகி ஓ.வி. ராம்குமாா், சங்க அலுவலா் சண்முகம் ஆகியோா் உடனிருந்தனா்.