பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
By DIN | Published On : 10th November 2021 11:29 PM | Last Updated : 10th November 2021 11:29 PM | அ+அ அ- |

ஆம்பூா் வட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தென்காசி எஸ்.ஐவஹா் புதன்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் பச்சகுப்பம் தரைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை அவா் பாா்வையிட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். பின்னா், விண்ணமங்கலம் கிராமத்தில் குடியிருப்புப் பகுதியில் மழைநீா் சூழ்ந்துள்ளதையும் அவா் பாா்வையிட்டு, மழைநீரை வெளியேற்றவும், மழைநீா் தேங்காதவாறு மழைநீா் வடிகால்வாய்கள் அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா, துணை ஆட்சியா் பானுமதி, எம்எல்ஏ அ.செ. வில்வநாதன், கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியா் அனந்த கிருஷ்ணன், மாதனூா் ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் சாந்தி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சசிகலா சாந்தகுமாா், திமுக பொதுக்குழு உறுப்பினா் சீனிவாசன், ஒன்றியக்குழு உறுப்பினா் காா்த்திக், விண்ணமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...