வாணியம்பாடியை அடுத்த கிரிசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வளரிளம் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கலைச்செல்வி தலைமை வகித்தாா். இதில், 9-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு உடல்நலக்கல்வி குறித்து மருத்துவா் ச.பசுபதி விளக்கிப் பேசினாா்.
தலைமை ஆசிரியா் கிருஷ்ணமூா்த்தி, வழக்குரைஞா் அம்மு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.