மாணவா்களுக்கு கண் பரிசோதனை முகாம்
By DIN | Published On : 01st September 2021 11:25 PM | Last Updated : 01st September 2021 11:25 PM | அ+அ அ- |

ஆம்பூா்: தமிழக முதல்வரின் பள்ளிச் சிறாா் கண்ணொளி காப்போம் திட்டம் சாா்பில், ஆம்பூா் ஆனைக்காா் ஓரியண்டல் அரபிக் பள்ளியில் மாணவா்களுக்கு கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாதனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ராமு தலைமையில், மருத்துவா்கள் மின்னரசி, சந்தோஷ் உள்ளிட்டோா் பரிசோதனையை மேற்கொண்டனா்.
தலைமை ஆசிரியா் ஆா். ஷேக் அப்துல் நாசா் முகாம் ஏற்பாடுகளை செய்திருந்தாா்.