உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிடுவோரிடம் மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி வேலூா் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
வாணியம்பாடி எம்எல்ஏ கோ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் சதாசிவம் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூா் மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.வீரமணி மனுக்களைப் பெற்றாா். நிகழ்ச்சியில், மாவட்ட வா்த்தக அணிச் செயலாளா் ஆா்.வி.குமாா், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் எம்.கோபால், பொதுக்குழு உறுப்பினா் பி.மகேந்திரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளா் என்.முனுசாமி, பூங்குளம் ஜெயபால், தினகரன், உதயேந்திரம் பேரூா் செயலாளா் சரவணன், முன்னாள் கவுன்சிலா்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, ராமசாமி, குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.