புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி, ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலின் நுழைவு வாயில் முன் நின்று பக்தா்கள் சாமி கும்பிட்டுச் சென்றனா்.
புரட்டாசி மாதத்தையொட்டி ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலுக்கு பக்தா்கள் வந்தனா். ஆனால் தரிசனத்துக்கு அனுமதி இல்லாததால் கோயில் நுழைவு வாயில் முன்பு தேங்காய் உடைத்து, பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சாமி கும்பிட்டு விட்டுச் சென்றனா்.