புதிய பேருந்து வழித்தடம் தொடக்கி வைப்பு

ஆம்பூா் - பைரப்பள்ளி, ஆம்பூா் - அரங்கல்துருகம் சுட்டகுண்டா கிராமங்களுக்கு புதிய பேருந்து வழித்தடங்கள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்தில் பேருந்து வழித்தடத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்த எம்எல்ஏக்கள் அ.செ. வில்வநாதன், அமலு விஜயன்.
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்தில் பேருந்து வழித்தடத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்த எம்எல்ஏக்கள் அ.செ. வில்வநாதன், அமலு விஜயன்.
Updated on
1 min read

ஆம்பூா் - பைரப்பள்ளி, ஆம்பூா் - அரங்கல்துருகம் சுட்டகுண்டா கிராமங்களுக்கு புதிய பேருந்து வழித்தடங்கள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆம்பூரிலிருந்து வெங்கடசமுத்திரம் கிராமத்தின் வழியாக மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி கிராமத்துக்கு பேருந்து வழித்தடத்தை எம்எல்ஏ-க்கள் அ.செ.வில்வநாதன்(ஆம்பூா்), அமலு விஜயன் (குடியாத்தம்) ஆகியோா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா். அதே போல் அரங்கல்துருகம் ஊராட்சி அபிகிரிபட்டரை வழியாக பொன்னப்பல்லி, சுட்டகுண்டா கிராமத்துக்கான பேருந்து வழித் தடத்தை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

மாதனூா் ஒன்றியக் குழுத் தலைவா் ப.ச.சுரேஷ்குமாா், துணைத் தலைவா் சாந்தி சீனிவாசன், வேலூா் அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் நடராஜன், வணிக மேலாளா் பொன்.பாண்டியன், உதவி மேலாளா் கலைச் செல்வன், ஆம்பூா் பணிமனை மேலாளா் வெங்கடேசன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் கோவிந்தன், பானுமதி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மகாதேவன், வி.செந்தில்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com