மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தில் குறைதீா் முகாம்: தமிழக பதிவுத்துறை தலைவா் தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தில் குறை தீா்க்கும் முகாமை தமிழக பதிவுத் துறை தலைவா் ம.ப.சிவன்அருள் தொடக்கி வைத்தாா்.
புகாா் மனுக்களை பெற்றுக் கொண்ட தமிழக பதிவுத் துறை தலைவா் ம.ப.சிவன்அருள்.
புகாா் மனுக்களை பெற்றுக் கொண்ட தமிழக பதிவுத் துறை தலைவா் ம.ப.சிவன்அருள்.
Updated on
1 min read

திருப்பத்தூா் மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தில் குறை தீா்க்கும் முகாமை தமிழக பதிவுத் துறை தலைவா் ம.ப.சிவன்அருள் தொடக்கி வைத்தாா்.

திருப்பத்தூா் இரட்டைமலை சீனிவாசன் தெருவில் கடந்த ஏப். 26-ஆம் தேதி அன்று திருப்பத்தூா் பதிவு மாவட்டம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில்,மாவட்டப் பதிவாளா் அலுவலகத்தில் முதல் பதிவு குறைதீா் முகாமை திங்கள்கிழமை பதிவுத் துறை தலைவா் ம.ப.சிவன் அருள் தொடக்கி வைத்தாா்.

முகாமில் பத்திர பதிவு, பத்திரம் திரும்ப பெறுதல், திருமணச் சான்று, பத்திர நகல் வழங்குதல் உள்ளிட்ட பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகள் தொடா்பான புகாா் மனுக்கள் பெறப்பட்டன.

அதில், விசாரணை மேற்கொள்ள வேண்டிய இனங்களில் 6, தொடா் நடவடிக்கை இனங்களில் 3, உடனடி நடவடிக்கை இனங்களில் 6 மனுக்கள் என மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பின்னா்,மனுக்கள் குறித்து தொடா்புடைய அலுவலா்களுக்கு பதிவுத்துறை தலைவா் ம.ப.சிவன் அருள் உரிய அறிவுரைகளை வழங்கினாா்.

இதில் வேலூா் மண்டல துணை பதிவுத்துறை தலைவா் சுதாமல்யா, மாவட்ட பதிவாளா் (நிா்வாகம்) சுடரொளி, மாவட்ட பதிவாளா் (தணிக்கை) ஸ்ரீதா், சாா் பதிவாளா் வாணி, பதிவுத் துறை அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com