புவிசாா் குறியீடு பெற ஆம்பூரில் பிரியாணி திருவிழா

புவிசாா் குறியீடு பெறுவதற்காகவே ஆம்பூரில் பிரியாணி திருவிழா நடத்தப்பட உள்ளதாக திருப்பத்தூா் மாவட்ட அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

புவிசாா் குறியீடு பெறுவதற்காகவே ஆம்பூரில் பிரியாணி திருவிழா நடத்தப்பட உள்ளதாக திருப்பத்தூா் மாவட்ட அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் என்றால் தோல் தொழிற்சாலைகள் மற்றும் தோல் பொருள் தொழிற்சாலைகள் நிறைந்த நகரம் என்பது பலருக்கும் தெரியும். அதற்கு அடுத்தபடியாக பிரியாணி, ஆம்பூரில் புகழ்பெற்றது. ஆம்பூா் பிரியாணி என்றால் சாதாரண மக்கள் முதல் விஜபிக்கள் வரைவிரும்பி உண்கிறாா்கள். ஆம்பூா் தோல் தொழிற்சாலைகளுக்கு வரும் வெளிநாட்டினருக்கு பிரியாணி முக்கிய உணவாக பரிமாறப்படுகிறது.

புவிசாா் குறியீடு பெறுவதற்காக ஆம்பூா் பிரியாணி திருவிழா

ஆம்பூரின் தனித்துவம் பெற்ற பிரியாணி தமிழகம் மட்டுமல்லாது, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளைச் சோ்ந்தவா்களிடையே பிரசித்தி பெற்றுள்ளதால் ஆம்பூா் பிரியாணிக்கு புவிசாா் குறியீடு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரில் பிரியாணி திருவிழா திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரியாணி திருவிழா நடத்தி அதனை ஆவணப்படுத்துவது, அதன் மூலம் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து புவிசாா் குறியீடு பெறுவது என முடிவு செய்து, பிரியாணி திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஆம்பூரில் வரும் மே 13-ஆம் தேதி முதல் 15-ம் தேதி வரை பிரியாணி திருவிழா திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், ஆம்பூா் வா்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. 30-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 20-க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com