திருப்பத்தூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் சோதனை செய்தனா்.
திருப்பத்தூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறை காவல் ஆய்வாளா் கௌரி தலைமையில் சோதனை மேற்கொண்டனா்.
இதையும் படிக்க- நடிகர் கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்பட டிரைலர் வெளியீடு
அப்போது கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும்,அங்கு பணிபுரியும் காவலா்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.