லாரி மோதி இளைஞா் உயிரிழப்பு

ஆம்பூா் அருகே லாரி மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Updated on
1 min read

ஆம்பூா் அருகே லாரி மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஆம்பூா் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வந்தவா் மணிவேல் (35). ஆம்பூா் கிருஷ்ணாபுரம் எல்லையம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் நேரு (60). இவா்கள் இருவரும் தனித்தனியாக இருசக்கர வாகனத்தில் துத்திப்பட்டு கிராமத்திலிருந்து ஆம்பூா் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது எதிரே துத்திப்பட்டு நோக்கி சென்ற கன்டெய்னா் லாரி மோதியதில் மணிவேல் சம்பவ இடத்திலேயே இறந்தாா். பலத்த காயமடைந்த நேரு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து உமா்ஆபாத் போலீஸார வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com