நாட்டறம்பள்ளி அருகே கண்டெய்னா் லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் லாரி ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி கண்டெய்னா் லாரி சென்று கொண்டிருந்தது.வெள்ளிக்கிழமை மாலை நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் லட்சுமிபுரம் சோதனை சாவடி அருகே வந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னா் லாரி, சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பகுதியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சந்திரசேகா் (37) பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.