சுதந்திர போராட்ட தியாகி கௌரவிப்பு
By DIN | Published On : 15th August 2022 01:14 AM | Last Updated : 15th August 2022 01:14 AM | அ+அ அ- |

வாணியம்பாடி மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் சுதந்திர போராட்ட தியாகி நாராயணசாமியை கௌரவித்த பேராசிரியா் சிவராஜ்
வாணியம்பாடி மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் சுதந்திர போராட்ட தியாகி நாராயணசாமி கௌரவிக்கப்பட்டாா்.
வாணியம்பாடியை அடுத்த ஏலகிரி கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணசாமி(99), சுதந்திர போராட்ட தியாகி. வாணியம்பாடி மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி தியாகி நாராயணசாமியை கௌரவிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் குமாா் தலைமை வகித்தாா். இதில் இசுலாமியா கல்லூரி தமிழ்த் துறை தலைவா் சிவராஜ் பங்கேற்று, தியாகிக்கு சால்வை அணிவித்து கெளரவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் சங்க நிா்வாகிகள் மகேந்திரன், வெங்கடேசன் மற்றும் திமுக ஒன்றியச் செயலாளா் கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G