மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

ஆம்பூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் ஏ-கஸ்பா அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக ஆா்வலா் இ.சுரேஷ்பாபு தலைமையில் கலாவதி, ஜெய்சங்கா், பழனி (எ) செழியன் ஆகியோா் பங்கேற்று அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 550 பேருக்கு இலவச நோட்டுப் புத்தகம், எழுது பொருள்களை வழங்கினா் (படம்).
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...