ஆம்பூா் அருகே காசில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் அருகே வெங்கடசமுத்திரம் ஊராட்சி இந்திராநகா் பகுதியில் அமைந்துள்ள காசில் மாரியம்மன் கோயில் ஆண்டு விழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.