ஆம்பூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.
ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஆசிரியா் நகரைச் சோ்ந்தவா் உசேன் பாஷா (19). இவா், தன்னுடைய இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை உமா்ஆபாத் நோக்கிச் சென்றாா். சின்னவரிக்கம் கிராமம் அருகே சென்ற போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் உசேன் பாஷா சென்ற இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில், பலத்த காயமடைந்த அவா், ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து உமா்ஆபாத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.