தினமணி செய்தி எதிரொலி: ஏரிகளில் குப்பைகளைக் கொட்டினால் வழக்கு: திருப்பத்தூா் ஆட்சியா் எச்சரிக்கை

ஏரிகளில் குப்பைகளைக் கொட்டினால் வழக்கு பதியப்படும் என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
Updated on
1 min read

ஏரிகளில் குப்பைகளைக் கொட்டினால் வழக்கு பதியப்படும் என்று திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலை, ஆதியூா் பகுதியில் உள்ள ஏரியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் ஏரி மாசு அடைவதுடன், துா்நாற்றம் வீசுவதால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்துள்ளாகின்றனா் என்று டிசம்பா் 5-ஆம் தேதி வெளியான தினமணி நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.

இது குறித்து மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கு.செல்வராசு கூறியது:

ஆதியூா் ஏரி உள்பட சில ஏரிப் பகுதிகளில் இரவு நேரங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. அது குறித்து முழுமையாக கண்காணித்து அவா்கள் மீது வழக்கு பதியவேண்டும் என்று ஆட்சியா் அமா் குஷ்வாஹா அறிவுறுத்தியுள்ளாா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com