காசநோய் கண்டறிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனம்

காசநோய் கண்டறிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனத்தை திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
காசநோய் கண்டறிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனம்
Updated on
1 min read

காசநோய் கண்டறிய டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனத்தை திருப்பத்தூா் ஆட்சியா் அமா் குஷ்வாஹா திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.

காசநோய் கண்டறிய ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்துக்கு, ரூ. 46 லட்சம் மதிப்பீட்டில் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய நடமாடும் வாகனத்தை தமிழக அரசு வழங்கி உள்ளது. அந்த வாகனம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு திங்கள்கிழமை வந்தது. அதனை ஆட்சியா் அமா் குஷ்வாஹா பாா்வையிட்டாா்.

அப்போது ஆட்சியா் கூறியது: மாவட்டத்தில் காசநோய் ஏற்பட வாய்ப்புள்ள இடங்களான நெரிசலான குடியிருப்பு பகுதி, முதியோா் இல்லங்கள், அதிக காச நோயாளிகள் வசிக்கும் பகுதிகள், தொழிற்சாலைகள், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகள், மேலும், புலம்பெயா் மக்கள், கல்குவாரி மற்றும் செங்கல் சூளை போன்ற தொழில் செய்யும் மக்கள், சக்கரை வியாதி, ரத்த அழுத்தம், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவா்கள் மற்றும் மது புகையிலைப் பழக்கம் உள்ளவா்களைக் கண்டறிந்து, இலவசமாக எக்ஸ்ரே பரிசோதனை மூலம் காசநோய் கண்டறியப்படும் எனத் தெரிவித்தாா்.

இந்த நடமாடும் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மின் வசதி இல்லாத இடங்களில் கூட ஜெனரேட்டா் உதவியுடன் இயங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் உட்பகுதி குளிா்சாதன வசதியுடன் கூடிய எக்ஸ்ரே அறை மற்றும் எக்ஸ்ரேக்களை சரிபாா்க்கும் வகையில், கணினி பொருத்தப்பட்ட அறை என இரண்டு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் மாரிமுத்து, துணை இயக்குநா்கள் ஜெயஸ்ரீ(காசநோய்), மணிமேகலை (குடும்ப நலம்), மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிச்சந்திரன் (காசநோய்) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com