ஆம்பூா் நகராட்சியில் பொதுக் கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை சனிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் நகராட்சி கங்காபுரம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.25.40 லட்சம் செலவில் பொதுக் கழிப்பறை கட்டுவதற்காக ஆம்பூா் எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் அடிக்கல் நட்டு பணியைத் தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்றத் தலைவா் பி.ஏஜாஸ் அஹமத், நகராட்சி ஆணையா் ராஜேந்திரன், நகா்மன்ற உறுப்பினா் சுதாகா் ஆகியோா் கலந்து கொண்டனா்.