ஊமை சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆடி விழா

நாட்டறம்பள்ளி சண்டியூா் பகுதியில் அமைந்துள்ள ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

நாட்டறம்பள்ளி சண்டியூா் பகுதியில் அமைந்துள்ள ஊமை சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் ஆடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து, மாலை மேளதாளம், பம்பை சிலம்பாட்டத்துடன் பால்குட ஊா்வலம் புறப்பட்டு நாட்டறம்பள்ளி முருகன் கோயிலை வந்தடைந்தது. அப்போது பக்தா் ஒருவா் முதுகில் அலகு குத்திக்கொண்டு, ராட்சத கிரேனில் அந்தரத்தில் தொங்கியவாறு சாலையில் சுமாா் 2 கி.மீ. தொலைவு வரை சென்று, அம்மனுக்கு நோ்த்திக் கடன் செலுத்தினா்.

விழாவில், நாட்டறம்பள்ளி கத்தாரி, சண்டியூா் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com