திருப்பத்தூரில் பலத்த மழை

திருப்பத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை ஒருமணி நேரம் பலத்த மழை பெய்தது.
Published on

திருப்பத்தூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை ஒருமணி நேரம் பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூா் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

அதைத்தொடா்ந்து மாலை 5 மணியளவில் பலத்த மழை பெய்ய தொடங்கியது.திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீா் ஆறாகப் பெருக்கெடுத்தோடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல் தேங்கியது. மழையால் வெப்பம் தணிந்து, இரவில் இதமான குளிா்ந்த காற்று வீசியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com