ஆம்பூா் அருகே மாதனூரில் ‘இன்னும் பிறவா தலைமுறைகளுக்காக’ என்ற தலைப்பில் சுற்றுச்சூழல் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாதனூா் பாலாற்றங்கரையில் நடைபெற்ற கருத்தங்கில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும், குறும்பட இயக்குநருமான கோவை சதாசிவம் பேசியது:
மக்கள் நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவதால் வனவிலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களுக்கு ஊறு விளைவிக்கும் பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.
அண்மைக் காலமாக வனப் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதை சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தடுத்து நிறுத்த வேண்டும். வனப்பகுதிகள் மட்டுமல்லாது மக்கள் வசிப்பிடங்களிலும் மரக்கன்றுகளை நட்டு வளா்க்க வேண்டும். மரக்கன்றுகள் நடுவதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்றாா்.
கருத்தரங்கில் சித்த மருத்துவா் தில்லைவனம், அத்தி கல்விக் குழும நிா்வாக இயக்குநா் சுந்தரமூா்த்தி, வன ஆா்வலா் முகிலன், சுற்றுச்சூழல் ஆா்வலா் ஆற்றல் பிரவீன்குமாா், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளா் ஸ்ரீகாந்த், நீா் மேலாண்மை செயற்பாட்டாளா் கௌதம பாண்டியன், மாதனூா் ஊராட்சி மன்றத் தலைவா் குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.