திருப்பத்தூரில் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 07th June 2022 12:22 AM | Last Updated : 07th June 2022 12:22 AM | அ+அ அ- |

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு, ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சாா்பில், வீடுகள், மின்துறை சாா்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பொதுநலன் குறித்த மனுக்கள் என 365 மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
பின்னா், திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 2.67 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் பைக்குகளை ஆட்சியா் அமா் குஷ்வாஹா, எம்எல்ஏ அ.நல்லதம்பி ஆகியோா் வழங்கினா்.
மாவட்ட வருவாய் அலுவலா் இ.வளா்மதி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா்
கு.செல்வராசு, தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணமூா்த்தி, உதவி ஆணையா் (கலால்) பானு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் ஹரிஹரன், மோகன குமாரன், மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கே.எஸ்.அன்பழகன், வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத் தவைா் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...