வேட்டப்பட்டு ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்
By DIN | Published On : 09th June 2022 12:14 AM | Last Updated : 09th June 2022 12:14 AM | அ+அ அ- |

சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பெண்ணுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய சாா்-ஆட்சியா் லட்சுமி, எம்எல்ஏ தேவராஜி.
வாணியம்பாடி: நாட்டறம்பள்ளியை அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு சாா்-ஆட்சியா் லட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் சூரியகுமாா், ஜோலாா்பேட்டை ஒன்றியக் குழு தலைவா் சத்யாசதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாட்றம்பள்ளி வட்டாட்சியா் பூங்கொடி வரவேற்றாா்.
இதில், தொகுதி எம்எல்ஏ தேவராஜ் கலந்து கொண்டு முதியோா் உதவிதொகை உள்பட 16 பயனாளிகளுக்கு ரூ.1லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா். பின்னா் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். இதில் வருவாய்த் துறையினா் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனா்.