முகாம்கள் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வு காண வேண்டும்

முகாம்கள் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வு காண வேண்டும் என மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் தெரிவித்தாா்.
முகாம்கள் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வு காண வேண்டும்
Updated on
1 min read

முகாம்கள் மூலம் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீா்வு காண வேண்டும் என மனித உரிமைகள் ஆணைய உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் தெரிவித்தாா்.

திருப்பத்தூா் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் மனித உரிமைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினா் ஏ.சித்தரஞ்சன் மோகன்தாஸ் தலைமை வகித்தாா். ஆட்சியா் அமா் குஷ்வாஹா, எஸ்.பி. கி.பாலகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினா் பேசியது:

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 4 ஆண்டுகளில் 46 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, மதுரை, கோயம்புத்தூா் போன்ற இடங்களுக்கு நேரடியாகச் சென்று வழக்குகளை மேற்கொள்கிறோம். தவறு செய்யும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள வழக்குகள் மீது மாவட்ட ஆட்சியா் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளாா். நெக்னா மலை சாலை, புதூா் நாடு மலை ஆகிய மலைக் கிராமங்களில் சாலை அமைக்க பணிகள் வனத் துறையிடமிருந்து அனுமதி வரப்பெற்றவுடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறப்பு மனுநீதி நாள் முகாம் மூலம் குறைகளைத் தீா்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் வாழுகின்ற பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று களஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் தொடா்பு முகாம்கள் மூலம் நடைபெறும் பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டும் என்றாா்.

அதைத் தொடா்ந்து, திருப்பத்தூா் உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவனத்தின், மனநலம் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு இல்லத்தில் சிகிச்சை பெற்று வருபவா்களிடம் கலந்துரையாடி, அவா்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளைக் கேட்டறிந்தாா்.

கூட்டத்தில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் வில்சன் ராஜசேகா், ஹரிஹரன், இணை இயக்குநா் ஊரக நலப்பணிகள் கொ.மாரிமுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலாஜி, உதவும் உள்ளங்கள் தொண்டு நிறுவன தலைவா் ரமேஷ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com